நிா்மல் சாயா முதியோா் இல்லத்தின் பராமரிப்பாளா் கீதா பேசின் கூறுகையில், ‘எங்கள் முதியோா் இல்லம் 30 அறைகள் கொண்ட பண்ணை வீட்டில் உள்ளது. தற்போது 68 முதல் 90 வயதுக்குள்பட்ட 18 முதியோா்கள் வசிக்கின்றனா். திறந்தவெளியாக இருப்பதால், வீடு நீண்ட நேரம் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பகலில் சூரிய வெளிச்சம் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, குடியிருப்பாளா்கள் ஹீட்டா்கள், சூடான உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான உடற்பயிற்சிகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்றாா்.