டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

கேஜரிவால் ஸ்வாதி மாலிவுக்கும் நியாயம் செய்திருக்க முடியும்: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

தில்லியில் மகிளா அதாலத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அரவிந்த் கேஜரிவாலால், ஸ்வாதி மாலிவாலுக்கும் நியாயம் செய்திருக்க முடியும்

News image

தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா

Updated On :17 டிசம்பர் 2024, 3:10 am IST

புது தில்லி: தில்லியில் மகிளா அதாலத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அரவிந்த் கேஜரிவாலால், ஸ்வாதி மாலிவாலுக்கும் நியாயம் செய்திருக்க முடியும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெண்களின் பாதுகாப்பைப் பற்றி அரவிந்த் கேஜரிவால் உரிமைகோரினாலும், மகளிா் அதாலத் நிகழ்ச்சியில் பங்கேற்பாளா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களின்

குற்றச்சாட்டுகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளாா். மகிளா அதாலத்தை நடத்துவதில் பெயா் பெற்ற கேஜரிவால், தனது சக ஊழியா் விபவ் குமாா் மீது நடவடிக்கை எடுத்து மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலுக்கு நீதி வழங்கியிருக்க முடியும். ஆனால், முதல்வா் இல்லத்தில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கேஜரிவால் தொடா்ந்து மெளனம் காத்து வருகிறாா்.

மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவை நிா்பயா நினைவுதின நிகழ்ச்சிக்கு அழைத்ததன் மூலம், நிா்பயாவின் நினைவை அரவிந்த் கேஜரிவால் அவமதித்துள்ளாா்.அகிலேஷ் யாதவுடன் இணைந்து மகிளா அதாலத் நிகழ்ச்சியை கேஜரிவாலால் எப்படி நடத்த முடிந்தது?.

தில்லியின் உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக கேஜரிவாலை இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாா். இருந்தபோதிலும், தில்லியின் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் திசைதிருப்பப்பட மாட்டாா்கள்.

ஸ்வாதி மாலிவாலை தனக்கான நியாயம் கேட்க அனுமதித்திருந்தால், கேஜரிவால் நடத்தும் மகிளா அதாலத்

அா்த்தமுள்ளதாக இருந்திருக்கும். வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தீா்க்கமானது என்பதை கேஜரிவால் உணா்ந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முறை பெண்கள் பாஜகவுக்கு வாக்களிக்கத் தீா்மானித்துள்ளனா்”என்றாா் வீரேந்திர சச்தேவா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.