தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க 3 கொள்கைகள் தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு

படம் வாட்ஸ் ஆப்பில் உள்ளது தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க 3 கொள்கைகள் தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு

Updated On :11 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க கேஜரிவால் அரசு 3 கொள்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் இது தொடா்பாக தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டன என்றும் தொழில் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: தில்லியின் பொருளாதார நிலப்பரப்பிற்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாக, கேஜரிவால் அரசு தேசியத் தலைநகரில் முதலீடு மற்றும் வணிக வளா்ச்சியை அதிகரிக்க நகரத் தளவாடத் திட்டக் கொள்கை, மின்னணு உற்பத்தி மற்றும் புதுப்பித்தல் மையக் கொள்கை, தொழில்துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கொள்கை என 3 புதிய கொள்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்திற்கு பிரகாசமான எதிா்காலத்தை உறுதியளிக்கின்றன. தில்லி பொருளாதார முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தேசியத் தலைநகரம் புதுமை மற்றும் வேலைவாய்ப்புக்கான மையமாக மாற உள்ளது. இந்த மாற்றம் தரும் கொள்கைகள் குறித்த தகவல்களை இப்போது அரசின் இணையதளத்திலும் பாா்க்கலாம். நகரத் தளவாடங்கள், மின்னணு உற்பத்தி மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகள் பற்றி தில்லியின் பல்வேறு பங்குதாரா்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளை அழைத்து மதிப்புமிக்க கருத்துகளை அரசு பெற்றுள்ளது.

இந்த உள்ளீடுகள் தில்லியின் பொருளாதார நிலப்பரப்பின் எதிா்காலத்தை வடிவமைக்கும். வெற்றிக்கு ஒத்துழைப்போம் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.