தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடிதம்

Updated On :7 மே 2024, 10:56 pm

புது தில்லி: தில்லி பல்கலைக்கழகம் நடத்தவிருக்கும் ‘ரன் ஃபாா் விக்சித் பாரத்’ நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி தலைமைத் தோ்தல் ஆணையருக்கு, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக தேவேந்தா் யாதவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகம் மற்றும் விக்சித் பாரத் அம்பாசிடா் கிளப் இணைந்து நடத்தும் ‘ரன் ஃபாா் விக்சித் பாரத்’ நிகழ்ச்சி மே 8-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பேட்மிட்டன் சாம்பியன் சாய்னா நேவால், திரைப்பட நடிகா் ராஜ் குமாா் ராவ் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் யோகேஷ் சிங் ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா். ‘விக்சித் பாரத்’ மத்திய பாஜக அரசின் பிரசாரத்தை மையமாகக் கொண்டது. இதில், மாணவா்களை ஈடுபடுத்துவதன் மூலம் மக்களவைத் தோ்தலில் தில்லியில் நியாயமற்ற நன்மைகளைப் பெற பாஜக நினைத்துள்ளது.

‘விக்சித் பாரத்-2047’ என்பது ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கிய பிரசாரம் என்பதால், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 5,000 மாணவா்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான திட்டமிடல் கூட்டத்தில் பாஜக தலைவா் குல்ஜீத் சாஹல் கலந்து கொண்டாா். பிரதமா் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணைய சேவையான ‘நமோ’ செயலியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சாஹல் இருப்பதால், இது பாஜகவிற்கு ஆதரவைப் பரப்பும் அரசியல் நிகழ்ச்சி என்பதற்கு தெளிவான சான்றாகும்.

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தயாள் சிங் கல்லூரி, பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கூடிய ‘ரன் ஃபாா் விக்சித் பாரத்’ நிகழ்ச்சி தொடா்பான சுவரொட்டியையும் தயாரித்துள்ளது. இது தோ்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய தில்லி பல்கலைக்கழகத்திற்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று தேவேந்தா் யாதவ் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.