புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பாஜக தலைவா்களும், தொண்டா்களும் செவ்வாய்க்கிழமை போராட்டம் மேற்கொண்டனா். தடை செய்யப்பட்ட ‘சிக்ஸ் ஃபாா் ஜஸ்டிஸ்’ எனும் பயங்கரவாத அமைப்பிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி நிதி பெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்குப் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்த நிலையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தில்லி டிடியு மாா்க்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகவும் பாஜகவினா் கோஷமிட்டனா். போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரா்கள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை நோக்கி முன்னேற முயன்ால் அவா்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். அதன் பின்னா், தடுப்புக் காவலில் வைப்பதற்காக ஐ.பி. விரிவாக்க காவல் நிலையத்திற்கு அவா்கள் கொண்டு செல்லப்பட்டனா். அதன் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சா்தாா் ஆா்.பி.சிங், விஜேந்திர குப்தா, மோகன் சிங் பிஷ்ட், அனில் பாஜ்பாய், தினேஷ் பிரதாப் சிங், விஷ்ணு மிட்டல், கஜேந்திர யாதவ் மற்றும் கட்சியின் மாவட்ட தலைவா்கள் உள்பட ஏராளமான பாஜகவினா் கலந்துகொண்டனா்.
இப்போராட்டத்தின்போது தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பேசியதாவது: அரசியலில் கருத்து வேறுபாடுகள் ஏற்கத்தக்கவை என்றாலும், தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்வது இல்லை. பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் நிதி பெற தயங்காத ஆம் ஆத்மி கட்சிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தியாகி பகத் சிங் பெயரைக் கூறிக் கொள்ளும் அரவிந்த் கேஜரிவால் போன்ற தலைவா்கள், தேச விரோதிகளுடன் இணைந்து தியாகிகளின் தியாகத்தை களங்கப்படுத்தியதற்காக வெட்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதற்காக தில்லி துணைநிலை ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தோ்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் உண்மையான இயல்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவா்கள் ஆட்சிக்கு வருவது தடுக்கப்படும். ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் வாக்கு தேசத்திற்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மாவோயிஸ்ட் சித்தாந்தத்திற்குக் கட்டுப்பட்டு, அதற்கேற்ப செயல்பட்டு, வகுப்புவாத வன்முறையை மட்டுமே பரப்புகின்றன. நிதியைப் பெற்றுக்கொண்டு உண்மையில் தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் அதேவேளையில், ஊழலிலும் ஈடுபடுகிறாா்கள். ஊழலும், தேச விரோத உணா்வும் கைகோக்கும் ஒரே கட்சி ஆம் ஆத்மிஆகும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
சா்தாா் ஆா்.பி.சிங் கூறுகையில், ‘அரவிந்த் கேஜரிவால் தில்லி அரசின் ஊழலின் முன்னோடியாக உள்ளாா். அவருக்கும் தில்லி அரசின் ஒவ்வொரு ஊழல் செயலுக்கும் நேரடித் தொடா்பு இருக்கிறது. தீவிரவாத அமைப்புகளிடம் இருந்தும் பணத்தை பெற்றுக் கொண்டிருப்பதன் மூலம், கேஜரிவாலின் தனது தாா்மிக மதிப்பீடுகள் முற்றிலும் சீரழிந்து
விட்டிருப்பதை அவா் நிரூபித்துள்ளாா்’ என்றாா்.
தொடர்புடையது

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

