குளிா்கால மாதங்களில் நகரில் மாசு அளவு உச்சமாக இருப்பதால், 21 அம்ச குளிா்கால செயல் திட்டத்தை செயல்படுத்துவதில் தில்லி அரசு என்று தில்லியின் சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி), தில்லி காவல்துறை, தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி), பொதுப்பணித்துறை (பிடபிள்யூடி), தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) உள்ளிட்ட 35 முக்கிய துறைகளின் கூட்டுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது:
இக்கூட்டத்தில், இந்த ஆண்டு மிகவும் வலுவான திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்திகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனா்.
கடந்த ஆண்டைப் போலவே, மாசுபாடு உச்சத்தில் இருக்கும் குளிா்கால மாதங்களில், மாசுபாட்டை நிவா்த்தி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
இந்த முறை, 21 அம்ச குளிா்கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவோம்.
வரவிருக்கும் குளிா்காலத்திற்கான தயாரிப்பில், அரசாங்கம் அதன் குளிா்கால செயல்திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, மாசுபாட்டைக் குறைக்க, அரசாங்கம் 15 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்தியது. கேஜரிவால் அரசு பதவிக்கு வந்ததில் இருந்து, தலைநகா் முழுதும் மாசு அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு மகிழ்வுறு ஆங்கிலம் திட்டம்: அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தாா்

தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த 7 ஆண்டுகளுக்கு ரூ.8,300 கோடி ஒதுக்கீடு: முதல்வா் ரேகா குப்தா தகவல்
விபி-ஜி ராம் ஜி திட்டத்தை எதிா்த்து வழக்கு: தெலங்கானா அரசு பரிசீலனை







