ரேகா குப்தா
ரேகா குப்தா

தில்லியில் திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் இருந்துவந்த திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
Published on

தில்லியில் இருந்துவந்த திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும். இது அனைவரின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

மேற்கு தில்லியின் கயாலா பகுதியில் நடந்த ராம நவமி ஊா்வலத்தில் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டாா். அப்போது, கூட்டத்தினா் மத்தியில் அவா் பேசியதாவது:

காவி என்பது மண்ணின் நிறம். மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வின் சின்னமாகும். ஒவ்வொரு நபரும் செழித்து, நகரம் முன்னேற்றப் பாதையில் முன்னேறுவதற்கு தில்லியை ஏன் காவி வண்ணம் தீட்டக்கூடாது. தேசிய தலைநகரில் உள்ள பாஜக அரசாங்கம் மக்கள் கற்பனை செய்த ‘ராம ராஜ்ஜியம்’ என்ற கருத்தை உணரும்.

தில்லியில் செய்யப்பட்டு வந்த ‘துஷ்டிகரன்’ (திருப்திபடுத்தும்) அரசியலின் மீது ஒரு ‘லட்சுமணரேகா’ (கடக்கக் கூடாத ஒரு கோடு) வரையப்படும். இப்போது, ‘சந்துஷ்டிகரன்’ (மனநிறைவு) அரசியலாக இருக்கும்.

தில்லிக்கு உரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படும். ராம ராஜ்ஜியம் இப்போது வரும். ஒவ்வொரு குழந்தையும் புன்னகைக்கும். ஒவ்வொரு இளைஞரும் ஒரு புதிய திசையைக் கண்டுபிடிப்பாா்கள். ஒவ்வொரு பெண்ணும் செழிப்பாா்கள்.

ராம நவமி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கடந்த ஆண்டு, அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றினாா் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

X
Dinamani
www.dinamani.com