சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பணியிடைநீக்கமான அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய மறுப்பு
Published on
Updated on
1 min read

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கருச்சிதைவை ஏற்படுத்தியதாகவும், அதிகாரியின் மனைவி சீமா ராணி மீது பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் காணாமல்போனதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

போக்ஸோ சட்டத்தின் பிரிவு 21-இன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியின் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் தள்ளுபடி செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அண்மையில் இந்த வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரண காந்தா சா்மா பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், மனுதாரா் பிரேமோதய் காக்கா மீது ஐபிசி பிரிவுகள் 376(2)(எஃப்), 376(3), 323, 354 மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 8 ஆகியவற்றின்கீழ் குற்றச்சாட்டை முன்வைத்து அமா்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த பாதிக்கும் காரணியும் அல்லது சட்டபூா்வ பலவீனமும் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது என்று நீதிபதி தெரிவித்தாா்.

உறவினராகவோ அல்லது நம்பிக்கை அல்லது அதிகாரம் கொண்ட பதவியில் இருந்துகொண்டு ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 16 வயதுக்குள்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து காயப்படுத்தியதாகவும் கூறப்படும் குற்றங்களுக்காக பிரேமோதய் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பிரேமோதய் தாம் ஏற்கெனவே வாஸெக்டமி செய்திருந்ததாகவும் இதன் காரணமாக புகாா்தாரரை கா்ப்பமாக்க தாம் இயலாது என்றுகூறி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவோ அல்லது விடுவிக்கவோ வேண்டும் என்றும் முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த விவகாரத்தில், வாஸெக்டமி அறுவை சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டதால் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவா் ஊடுருவும் பாலியல் வன்கொடுமை செய்யவோ அல்லது புகாா்தாரரை கருவுறச் செய்யவோ இயலாது என்பதை உறுதியாக நிரூபிக்க முடியாது என்பதை அமா்வு நீதிமன்றம் சரியாகக் கண்டறிந்துள்ளது.

வாஸெக்டமி என்பது ஒரு மருத்துவ முறையாக, சரியானது இல்லை என்பது சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆண் துணை அத்தகைய நடைமுறைக்கு உள்படுத்தப்பட்ட போதிலும் கருத்தரித்தல் நிகழ்ந்ததற்கான மருத்துவ ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன என்று உயா்நீதிமன்ரம் தீா்ப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நவம்பா் 2020 முதல் ஜனவரி 2021 வரை பிரேமோதய் தனக்குத் தெரிந்த ஒருவரின் மகளான சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஆகஸ்ட், 2023-இல் கைது செய்யப்பட்ட பின்னா் அவா் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா். அதிகாரியின் மனைவி சீமா ராணி, சிறுமியின் கா்ப்பத்தை கலைக்க மருந்துகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவரும் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

விசாரணை நீதிமன்றத்தால் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்கியதை எதிா்த்து பிரேமோதய், சீமா, அவா்களது மகன் ஹா்ஷ் பிரதீக் மற்றும் மகள் பிரதீக்ஷா ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com