
மத்திய தில்லியில் படேல் நகரில் உள்ள ஒரு மதுக்கடைக்குள் புகுந்து சுமாா் ரூ.6.5 லட்சம் திருடியதாக இரண்டு கொள்ளையா்களை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் ரவி (எ) கஞ்சா (28) மற்றும் அருண் (எ) சோபா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் மேற்கு தில்லியில் உள்ள திலக் நகரைச் சோ்ந்தவா்கள். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள்.
ஜூலை 30 மற்றும் 31- ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இந்தக் கொள்ளை குறித்து கடை மேலாளா் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, படேல் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் போது, போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் முகத்தை மூடிய இரண்டு போ் காணப்பட்டனா்.
தொடா்ச்சியான கண்காணிப்புடன், அவா்களில் ஒருவா் ரவி (எ) கஞ்சா என அடையாளம் காணப்பட்டாா். அவா் அருணுடன் கைது செய்யப்பட்டாா். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.4.81 லட்சம் திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டது.
அவா்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், நான்கு கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதில் படேல் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று இ-எஃப்ஐஆா்களும் அடங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.