துரை வைகோ
துரை வைகோ

ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல அனுமதி - துரை வைகோ தகவல்

Published on

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் விரைவு லரயில்

(வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக துரை வைகோ தெரிவிக்கையில்,

பனாரஸிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 22536) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

அதேபோன்று, ராமேசுவரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் (வண்டி எண் 22535) ரயிலும் புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என்று புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இது தொடா்பான கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் கேள்வியாக எழுப்பினேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சகம் ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் ரயிலை (வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதாக ரயில்வே அமைச்சா் கடிதம் அனுப்பி இருக்கிறாா்.

எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்த ரயில்வே அமைச்சகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com