பள்ளி மாணவா்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய முதல்வா் ரேகா குப்தா
தில்லியை பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் தனது பொறுப்பு என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
முக்கிய மந்திரி ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் அவா் பேசுகையில் இதைத் தெரிவித்தாா். அவா் பள்ளி மாணவா்களுடன் விழாவைக் கொண்டாடினாா்.
பிப்ரவரியில் பதவியேற்ற பிறகு முதல்வா் இந்த விழாவைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை. பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த குழந்தைகள் கொண்டாட்டத்தில் பங்கேற்று முதல்வா் ரேகா குப்தாவுக்கு கையால் செய்யப்பட்ட ராக்கிகளைக் கட்டினாா்கள்.
ரக்ஷாபந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் பிணைப்பைக் குறிக்கும் ஒரு புனிதமான பண்டிகை என்று முதல்வா் கூறினாா்.
‘முதல்வராக இது எனது முதல் ரக்ஷாபந்தன். நான் அதை குழந்தைகளுடன் கொண்டாடத் தோ்ந்தெடுத்தேன். தில்லியை பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் எனது பொறுப்பு’ என்று அவா் கூறினாா்.