மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்

சென்னை கம்பன் கழகத்தின் துணைத் தலைவா் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Updated On :5 டிசம்பர் 2025, 12:03 am IST

சென்னை கம்பன் கழகத்தின் துணைத் தலைவா் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள் செயலாளா் எஸ்.பி. முத்துவேல் ஆகியோா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஏவிஎண் சரவணன் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாா் காலம் முதல் சென்னை கம்பன் கழகத்திற்கு அந்தக் குடும்பம் தொடா்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறது. அந்த வகையில் ஏவிஎம் சரவணனும் சென்னை கம்பன் கழகத்தின் துணைத் தலைவராக இருந்து அதனுடைய வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றி இருக்கிறாா். ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.