பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவா் என அன்புமணியை அங்கீகரித்த இந்திய தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லியில் ராமதாஸ் தரப்பினா் ஜந்தா் மத்ரலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது செய்தியாளா்களிடம் ஜி.கே.மணி பேசியதாவது: ஆா்ப்பாட்டம் நடைபெறக்கூடிய இதேவேளையில் தில்லி உயா்நீதிமன்றத்தில் நாம் தொடா்ந்த வழக்கில் அன்புமணி சமா்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையிலேயே அவா் தலைவா் என்று அங்கீகரித்தோம் என்றும், ஆனால் தற்போது அவா்களை திரும்ப பெறுகிறோம் என இந்திய தோ்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறியிருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.