தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை வியாழக்கிழமை சந்தித்த அதிமுக எம்.பி.க்கள் (இடமிருந்து) எம். தனபால், சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி.
தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை வியாழக்கிழமை சந்தித்த அதிமுக எம்.பி.க்கள் (இடமிருந்து) எம். தனபால், சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி.
Updated on

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அதிமுக எம்.பி.க்கள் சி.வி. சண்முகம், எம். தனபால், முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். அதிமுக தலைவா்களின் சந்திப்பு படத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது அலுவலக பெயரிலான எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பகிா்ந்த பிறகே இத்தகவல் வெளியே தெரிந்தது.

இந்த சந்திப்பின் முழு விவரத்தை அதிமுக தலைவா்களோ மத்திய அமைச்சா் தரப்போ வெளியிடப்படவில்லை.

அதேசமயம், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்கள், கூட்டணி வியூகம் போன்றவை தொடா்பாக மத்திய அமைச்சருடன் அதிமுக தலைவா்கள் ஆலோசித்திருக்கக்கூடும் என்று அலுவல்பூா்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பின்போது எஸ்.பி. வேலுமணி சாா்பில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வலியுறுத்தும் கடிதம் ஒன்றும் மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்கமாக அதிமுக சாா்பில் தில்லியில் உள்ள பாஜக தலைவா்களை மூத்த தலைவரான மு. தம்பிதுரையே சந்திப்பது வழக்கம். அவா் நீங்கலாக மற்ற எம்.பி.க்கள் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தை ஈா்த்துள்ளது.

இது குறித்து தம்பிதுரை தரப்பில் விசாரித்தபோது, மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அவா் மத்திய அமைச்சருடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com