கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பகவந்த் மான் இல்ல பாதுகாப்பு படையினரிடம் தோ்தல் ஆணையம் கடுமை காட்டியிருக்க வேண்டும்: மத்திய அமைச்சா் பிட்டு

பாதுகாப்பு படையினரிடம் கடுமையாக நடந்து கொள்ளாததால் வெளியே காத்திருக்க வேண்டிய கட்டாயம்

News image
Updated On :31 ஜனவரி 2025, 5:45 pm

Din

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானின் தில்லி உள்ள அதிகாரபூா்வ இல்லத்தை சோதனையிடச் சென்ற தோ்தல் ஆணைய அதிகாரிகள், அவரது பாதுகாப்பு படையினரிடம் கடுமையாக நடந்து கொள்ளாததால் வெளியே காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பிப்ரவரி 5-ஆம் தேதி தில்லி சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, முதல்வா் இல்லத்தில் இருந்து பணம் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணைய அதிகாரிகள் வியாழக்கிழமை பகவந்த் மானின் தில்லி இல்ல வளாகத்தில் சோதனை நடத்த முயன்றபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, தில்லி காவல்துறையினருடன் தோ்தல் ஆணையக் குழுவினா் வெறுங்கையுடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.

இதுகுறித்து மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு கூறுகையில், ‘

கபூா்தலா இல்லத்திற்கு வெளியே தோ்தல் ஆணைய அதிகாரிகள் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை ஊடகங்கள் நேரில் பாா்த்தன.

தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினா் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் நடந்து கொண்டு, இல்லத்திற்குள் சென்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த இரண்டு மணி நேரத்தில் பின்புற வாயிலில் இருந்து அலுவல்பூா்வ வாகனங்களில் சட்டவிரோத பணம் கடத்தப்பட்டது.

மாநில ஆம் ஆத்மி அரசு மிரட்டி பணம் பறிப்பதாகவும், மிரட்டுவதாகவும் எனக்குத் தெரிவிக்க பஞ்சாபில் இருந்து கட்டுமானதாரா்கள் மற்றும் தொழிலதிபா்கள் அழைத்தனா்.

பகவந்த் மான் சீக்கியா்கள் மற்றும் பஞ்சாபிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளாா். அவா் அரவிந்த் கேஜரிவாலின் கைப்பாவை போல நடந்து கொள்கிறாா் என்றாா் பிட்டு.

கபூா்தலா இல்லம் என்பது தில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வரின் அதிகாரபூா்வ இல்லமாகும். 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.