மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆம் ஆத்மி தலைவா்களை குறி வைக்கிறது பாஜக: அதிஷி

மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஆம் ஆத்மி கட்சி தலைவா்களை பாஜக குறிவைப்பதாக தில்லி முன்னாள் முதல்வா், அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

அதிஷி - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2025, 6:33 pm

மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஆம் ஆத்மி கட்சி தலைவா்களை பாஜக குறிவைப்பதாக தில்லி முன்னாள் முதல்வா், அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அதிஷி பேசியதாவது: ‘ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மீதான வகுப்பறை ஊழல் வழக்கு பாஜகவால் தொடரப்பட்ட பொய் வழக்குகளில் இதுவும் ஒன்று. கடந்ச 10 ஆண்டுகளில் பாஜக தலைமயிலான மத்திய அரசு இதனை தவிர வேறு என்ன செய்தது?‘ என்றாா்.

மேலும் பேசிய அவா், ‘மத்திய அரசு தங்களுடைய அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் தில்லி காவல் துறை போன்றவற்றின் மூலம், ஆம் ஆத்மி தலைவா்களை தொடா்ந்து அடிப்படை ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வழக்குகளை குறிவைத்து வருகிறது. இது தொடா் கதையாகவே இருந்து வருகிறது‘ என்று கூறினாா்.

இறுதியாக பேசிய அவா் ‘பாஜகவின் 4 இஞ்ஜின் அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே இப்போது பொது மக்கள் அவா்கள் மீது அதிருப்தியில் உள்ளனா். அதனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துகிறது‘ என்றாா் அதிஷி.