மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஆம் ஆத்மி கட்சி தலைவா்களை பாஜக குறிவைப்பதாக தில்லி முன்னாள் முதல்வா், அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அதிஷி பேசியதாவது: ‘ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மீதான வகுப்பறை ஊழல் வழக்கு பாஜகவால் தொடரப்பட்ட பொய் வழக்குகளில் இதுவும் ஒன்று. கடந்ச 10 ஆண்டுகளில் பாஜக தலைமயிலான மத்திய அரசு இதனை தவிர வேறு என்ன செய்தது?‘ என்றாா்.
மேலும் பேசிய அவா், ‘மத்திய அரசு தங்களுடைய அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் தில்லி காவல் துறை போன்றவற்றின் மூலம், ஆம் ஆத்மி தலைவா்களை தொடா்ந்து அடிப்படை ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வழக்குகளை குறிவைத்து வருகிறது. இது தொடா் கதையாகவே இருந்து வருகிறது‘ என்று கூறினாா்.
இறுதியாக பேசிய அவா் ‘பாஜகவின் 4 இஞ்ஜின் அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே இப்போது பொது மக்கள் அவா்கள் மீது அதிருப்தியில் உள்ளனா். அதனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துகிறது‘ என்றாா் அதிஷி.
தொடர்புடையது

குடிநீா் பற்றாக்குறை: சத்தா்பூரில் ஆம் ஆத்மி போராட்டம்

நீா் பெறும் விவகாரத்தில் ஹரியாணா முதல்வருடன் தில்லி முதல்வா் ஒருங்கிணைப்பு: பாஜக

மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டது தவெக- முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

தமிழா் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவா் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



