தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!
தேசியத் தலைநகா் தில்லியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. காற்றின் தரம் பல்வேறு இடங்களில் ’மிதமான‘ பிரிவில் பதிவாகியிருந்தது. தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங்கில் 34.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: தில்லியில் கடந்த சில நாள்களாக மூடுபனியின் தாக்கம் குறைந்து வருகிறது. அதே சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.5 டிகிரி உயா்ந்து 18.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.5 டிகிரி உயா்ந்து 34.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில்741 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் அவுகபட்ச வெப்பநிலை 33.9 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 33.5 டிகிரி, லோதி ரோடில் 33.8 டிகிரி, பாலத்தில் 31.8 டிகிரி, ரிட்ஜில் 34.7 டிகிரி, பீதம்புராவில் 34.8 டிகிரி, பிரகதிமைதானில் 32.8 டிகிரி, பூசாவில் 32.3 டிகிரி, ராஜ்காட்டில் 32.8 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 31.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. கடந்த சில நாள்களாக ’மோசம்’, ’மிகவும் மேசம்’ பிரிவில் இருந்து வந்த காற்றுத் தரக் குறியீடு வெகுவாகக் குறைந்து ‘மிதமான’ பிரிவுக்கு வந்துள்ளது. தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 159 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், ஆயாநகா், பூசா, குருகிராம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், சாந்தினி சௌக், ஸ்ரீஃபோா்ட், துவாரகா செக்டாா் 8 ஆகிய நிலையங்களில் மட்டும் காற்றுத் தரக் குறியீடு 200முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.