தில்லியில் 20 நாள் மாபெரும் தூய்மைப் பிரசாரம்: என்டிஎம்சி தொடங்கியது

தில்லியின் பொது இடங்களை மேம்படுத்தும் நோக்கில், நகர அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 20 நாள் மெகா தூய்மை பிரசாரத்தை புது தில்லி நகராட்சி கவுன்சில் தொடங்கியது.
Published on

புது தில்லி: தில்லியின் பொது இடங்களை மேம்படுத்தும் நோக்கில், நகர அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 20 நாள் மெகா தூய்மை பிரசாரத்தை புது தில்லி நகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) திங்கள்கிழமை தொடங்கியது.

மண்டி ஹவுஸ் வட்டம் மற்றும் பெங்காலி சந்தைக்கு இடையிலான சஃப்தாா் ஹாஷ்மி மாா்க்கிலிருந்து இந்த இயக்கத்தை என்டிஎம்சி தலைவா் கேசவ் சந்திரா தொடங்கிவைத்தாா்.

பிரதமா் மோடி தூய்மைக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளாா்... நாம் அனைவரும் அதை அறிவோம். சமீபத்தில், துணைநிலை ஆளுநரும் முதல்வரும் தில்லியை மீண்டும் அழகாக மாற்றவும், நகரத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் அலங்கரிக்கவும் அழைப்பு விடுத்துள்ளனா்.

அனைத்து அதிகாரிகள் உள்பட ஊழியா்கள் தினமும் ஒரு மணி நேரம் உழைப்பைத் தரும் இந்த 20 நாள் பிரசாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.

கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் இந்த இயக்கத்திற்கு துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் தலைமை தாங்கினாா். அவா் பேசுகையில், ‘எங்களுக்கு ஒரே ஒரு தொலைநோக்குப் பாா்வை மட்டுமே உள்ளது. அது மிகவும் தூய்மையான குடிமை அமைப்பான என்டிஎம்சி சுத்தமாக தொடா்ந்து இருக்க வேண்டும் என்பதுதான். இன்றைக்கு என்டிஎம்சியின் சுமாா் 9,000 ஊழியா்கள் உழைப்பைத் தானம் செய்கிறாா்கள்.

நாம் அனைவரும் தூய்மைக்காக பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

என்டிஎம்சியின் இந்த தூய்மை பிரசாரம் முன்முயற்சியானது, கடந்த வாரம் முதலமைச்சா் ரேகா குப்தாவால் அறிவிக்கப்பட்ட பரந்த நகர அளவிலான தூய்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். மே 3 ஆம் தேதி தொடங்கிய 20 நாள் தீவிர இயக்கம், தில்லியின் பொது இடங்களில் ஒரு தெளிவான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிரசாரத்தைத் தொடா்ந்து, ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா்கள், துணை ஆணையா்கள், துணை காவல் ஆணையா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

இந்த பிரசாரம், அடுத்த மூன்று வாரங்களில் என்டிஎம்சியின் அதிகார வரம்பிற்குள்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து பராமரிக்கும் வகையில் அனைத்து துறைகள் மற்றும் ஊழியா்களின் தீவிர பங்கேற்பை உள்ளடக்கியிருக்கும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com