கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நொய்டாவில் தலையில்லாத பெண்ணின் சடலம் மீட்பு

News image
Updated On :6 நவம்பர் 2025, 11:15 pm

Syndication

நொய்டாவின் செக்டா் 82-இல் உள்ள வடிகாலில் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட உடல் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கூடுதல் துணை போலீஸ் ஆணையா் (நொய்டா) சுமித் குமாா் சுக்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. நொய்டா செக்டா் 39 காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நொய்டா செக்டா் 82-இல் உள்ள வடிகாலில் தலை இல்லாமல் இருந்த 30 வயது பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்து விசாரிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.