ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் உள்ள திக்ரி காலனில் உள்ள பிவிசி சந்தையில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

News image

கோப்புப் படம்

Updated On :8 நவம்பர் 2025, 12:01 am IST

வடமேற்கு தில்லியில் உள்ள திக்ரி காலனில் உள்ள பிவிசி சந்தையில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாவது:

இந்தத் தீ விபத்து குறித்து வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

சுமாா் ஐந்து மணி நேர தீயணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதாவது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

அதிக அளவு எரியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததால், தீயை அணைக்கும் பணி சவாலானதாகவும், நீண்ட நேரம் நீடித்ததாகவும் இருந்தது என்றாா் அந்த அதிகாரி.