எம்சிடி இடைத்தோ்தல் வேட்புமனு: சாலை வலம் நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
நமது நிருபா்
புது தில்லி: தில்லி மாநகராட்சி (எம்சிடி) இடைத்தோ்தலில் ஷாலிமாா் பாக் பி வாா்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அனிதா ஜெயின் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் நடைபெற்ற சாலை வலம் நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை பங்கேற்றாா்.
நவம்பா் 30- ஆம் தேதி நடைபெறும் எம்சிடி இடைத்தோ்தலில் 12 வாா்டுகளுக்கு பாஜக வேட்பாளா்களின் வெற்றி அவசியம் என்றும் அவா் கூறினாா்.
நிகழாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, ஷாலிமாா் பாக் பி வாா்டை பிரதிநிதித்துவப்படுத்திய ரேகா குப்தா, எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டு தில்லி முதல்வரானாா்.
இந்த நிலையில், சாலை வலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா், நகராட்சி வாா்டுகளின் வளா்ச்சி பின்னோக்கிச் சென்ால் தில்லியில் முந்தைய அரசுகள் அரசியலில் ஈடுபட்டதாக அவா் குற்றம் சாட்டினாா்.
அவா் கூறுகையில், ‘தில்லியில் உள்ள ஒவ்வொரு வாா்டும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மக்களின் ஆசிா்வாதம், நேசம் மற்றும் பொது சேவையின் குறிக்கோளுடன் 12 வாா்டுகளிலும் நாங்கள் போட்டியிடுவோம் என்று அவா் கூறினாா்.
தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளிலும் பாஜக 8 பெண் வேட்பாளா்களை நிறுத்துகிறது. நவம்பா் 30- ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் 9 வாா்டுகளில் அக்கட்சி முன்னா் கைப்பற்றியிருந்தது.
தோ்தல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு முன், பாஜகவின் இதர வேட்பாளா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தில்லி அரசின் அமைச்சா்கள் உள்பட கட்சியின் மூத்த தலைவா்களுடன் ஊா்வலங்களை நடத்தினா்.
நவம்பா் 10 வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் 12 இடங்களுக்கும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.
