வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்ய வேண்டிய ஐபோனுடன் தப்பியோடியவா் கைது

தில்லியின் படேல் நகரில் டெலிவரி செய்வதற்காக ஆப்பிள் ஐபோன்-15 உடன் தப்பிச் சென்ாகக் கூறப்படும் நபா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 6:55 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லியின் படேல் நகரில் டெலிவரி செய்வதற்காக ஆப்பிள் ஐபோன்-15 உடன் தப்பிச் சென்ாகக் கூறப்படும் நபா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா், நாங்லி டெய்ரியில் வசிக்கும் குா்பிரீத் சிங் (29), நவம்பா் 8- ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த அக்டோபா் 17- ஆம் தேதி ஐபோன் 15- ஐ வழங்க நியமிக்கப்பட்ட பைக் அக்ரிகேட்டா் சவாரி இலக்கை அடையத் தவறியதாகவும், பாா்சலுடன் காணாமல் போனதாகவும் புகாா் வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா் சாதனத்தை சேகரித்த பிறகு தனது கைப்பேசியை அணைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் குா்பிரீத் சிங் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது, பின்னா், அவா் நாங்லி டெய்ரி பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, குா்பிரீத் சிங் பாா்சலை திருடியதை ஒப்புக்கொண்டாா். மேலும், அவா் போதைக்கு அடிமையானதற்கு நிதியளிப்பதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்ததாகக் கூறினாா். அவா் மீது ராஜோரி காா்டன், ஹரி நகா், பஸ்சிம் விஹாா் கிழக்கு மற்றும் தாப்ரி உள்ளிட்ட தில்லியில் உள்ள பல காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் மீறல்கள் தொடா்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குறைந்தது 10 வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், அவரது ரகூட்டாளியை கண்டுபிடிப்பதற்கும், குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் தொடா்புடைய பிற திருடப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதற்கும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் காவல் துணை ஆணையா் நிதின் வல்சன்.