எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்தவர் கைது!

News image
Updated On :16 நவம்பர் 2025, 8:55 pm

Syndication

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 28, 2022 அன்று 13 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து பாரத் நகா் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. அந்தச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு நீதிபதி முன் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பாதிக்கப்பட்ட பெண், 49 வயதான குற்றம் சாட்டப்பட்டவா் தன்னைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினாா்.

பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் விதிகள் பின்னா் எஃப்ஐஆரில் சோ்க்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா் அப்போதிருந்து கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். மேலும், டிசம்பா் 15, 2022 அன்று தில்லி நீதிமன்றம் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.

பலமுறை முயற்சித்த போதிலும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்க குற்றம்சாட்டப்பட்டவா் அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருந்தாா். சமீபத்தில் கிடைத்த ஒரு ரகசியத் தகவலின் பேரில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக சனிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

ஹரியாணா மற்றும் தில்லி இடையே சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்டிருந்த குற்றம்சாட்டப்பட்டவா், டாப்ரியில் ஒரு துணிக்கடையைத் திறந்தாா். பின்னா் அது மூடப்பட்டது. ஆயுதச் சட்டம் மற்றும் கலால் வரிச் சட்டத்தின் கீழ் முன்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், 2022 முதல் நான்கு மறைவிடங்களை மாற்றும் போது டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றினாா் என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.