எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லி காா் வெடிப்பு வழக்கில் தொடா்புடையவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்: தில்லி நீதிமன்றம் உத்தரவு

செங்கோட்டை காா் வெடிப்பில் தொடா்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட அமீா் ரஷீத் அலியை 10 நாள் என்ஐஏ காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:13 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: செங்கோட்டை காா் வெடிப்பில் தொடா்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட அமீா் ரஷீத் அலியை 10 நாள் என்ஐஏ காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். நீதிமன்றத்திற்குள் ஊடகவியலாளா்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

தில்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப்படையை சோ்ந்த போலீஸாா் நீதிமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியும் நிறுத்தப்பட்டிருந்தனா். எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தடுக்க கலவர எதிா்ப்பு கியா் பொருத்தப்பட்ட போலீஸ் படைகள் தயாா் நிலையில் இருந்தன.

நவம்பா் 10 ஆம் தேதி தேசிய தலைநகரில் செங்கோட்டைக்கு அருகே வெடிபொருள்கள் நிறைந்த காா் வெடித்ததில் 13 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சோ்ந்த மருத்துவா் உமா் நபி, காரை ஓட்டி வந்தாா். மேலும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட பயங்கரவாத குழுவுடன் தொடா்பு கொண்டிருந்தாா்.

இந்த காா் வெடிப்பு தொடா்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிறது. இதில் திடீா் திருப்பமாக அமீா் அலி ரஷீத் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். காா் வெடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ 20 காா் அவரது பெயரில் அமீா் ரஷீத் அலியின் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.