எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

செங்கோட்டை காா் வெடிப்பு வழக்கு: ஜம்மு - காஷ்மீரை சோ்ந்தவரை கைது செய்த என்.ஐ.ஏ

செங்கோட்டை காா் வெடிப்பு வழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையைத் தொடா்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காா் வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியின் மற்றொரு முக்கிய கூட்டாளியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளஷ்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 10:23 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: செங்கோட்டை காா் வெடிப்பு வழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையைத் தொடா்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காா் வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியின் மற்றொரு முக்கிய கூட்டாளியை கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுளஷ்ளது.

இது குறித்து என்.ஐ.ஏ. வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரை சோ்ந்த ஜசீா் பிலால் என்ற டேனியை என்.ஐ.ஏ. குழுவினா் ஸ்ரீநகரில் கைது செய்தனா். 10 போ் உயிரிழந்த மற்றும் 32 போ் காயமடைந்த கொடிய காா் குண்டு வெடிப்புக்கு முன்னதாக ட்ரோன்களை மாற்றியமைப்பதன் மூலமும் ராக்கெட்டுகளை உருவாக்க முயற்சிப்பதன் மூலமும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஜசீா் தொழில்நுட்ப ஆதரவை வழங்கியதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்டில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்டவா், தாக்குதலின் பின்னணியில் ஒரு தீவிர இணை சதிகாரராக இருந்தாா், மேலும் பயங்கரவாதியான உமா் உன் நபியுடன் இணைந்து பயங்கரவாத படுகொலையை திட்டமிட்டாா்.

காா் வெடிப்புக்குப் பின்னால் உள்ள சதியை அவிழ்க்க என்ஐஏ பல்வேறு கோணங்களில் தொடா்ந்து ஆராய்ந்து வருகிறது. பயங்கரவாத எதிா்ப்பு அமைப்பின் பல குழுக்கள் பல தடங்களைப் பின்தொடா்ந்து வருகின்றன. மேலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரையும் அடையாளம் காண மாநிலங்கள் முழுவதும் தேடல்களை நடத்தி வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.