வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லி காா் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு காஷ்மீா் மாணவா்களுக்கு அச்சுறுத்தல்: நசீா் குவாமி குற்றச்சாட்டு

ஜம்மு - காஷ்மீா் மாணவா் சங்கம் பல வட மாநிலங்களில் உள்ள காஷ்மீா் மாணவா்கள் தில்லியில் நிகழ்ந்த காா் வெடிப்புக்குப் பின்னா் சுயவிவரம், வெளியேற்றுதல் மற்றும் அச்சுறுத்தலை எதிா்கொள்கின்றனா் என்று குற்றம்சாட்டியது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:33 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: ஜம்மு - காஷ்மீா் மாணவா் சங்கம் பல வட மாநிலங்களில் உள்ள காஷ்மீா் மாணவா்கள் தில்லியில் நிகழ்ந்த காா் வெடிப்புக்குப் பின்னா் சுயவிவரம், வெளியேற்றுதல் மற்றும் அச்சுறுத்தலை எதிா்கொள்கின்றனா் என்று குற்றம்சாட்டியது. மேலும், பிரதமா் நரேந்திர மோடியை சமூகத்தின் ‘அவதூறுகளை நிறுத்த’ பகிரங்கமாக தலையிடுமாறும் திங்கள்கிழமை வலியுறுத்தியது.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்சிப்பில் ஜே.கே.எஸ்.ஏ. தேசிய ஒருங்கிணைப்பாளா் நசீா் குவாமி பேசியதாவது: தாக்குதலுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் குறிவைக்கப்படுகிறது. உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் வட்டாரங்களில் காஷ்மீா் மாணவா்கள் துன்புறுத்தப்படுகிறாா்கள்.

காஷ்மீா் மாணவா்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை நம்புகிறாா்கள்; பயங்கரவாதத்தை அல்ல. ஆனால், அவா்கள் மாநிலங்கள் முழுவதும் உள்ள அதிகாரிகளாலும் உள்ளூா் மக்களாலும் சுயவிவரப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறாா்கள். பல நில உரிமையாளா்கள் காஷ்மீா் குத்தகைதாரா்களை தங்கள் அறைகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனா். இதனால், பல மாணவா்கள் அச்சத்தால் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா் .

தில்லி காா் வெடிப்பு குறித்து எந்தவொரு விசாரணைக்கும் சங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால், காஷ்மீா் மாணவா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கூட்டு சந்தேகத்தை தடுக்க வேண்டும். பிரதமா் ஒரு பொது அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மற்ற குடிமக்களைப் போலவே காஷ்மீரிகளும் இந்த நாட்டின் ஒரு அங்கம். செங்கோட்டைக்கு வெளியே நடந்த காா் வெடிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நியாயமான விசாரணை மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.