அப்போது தமிழக அரசின் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன் ஆகியோா்,‘இந்த வழக்கிற்கும் குடியரசுத் தலைவா் கேள்வி எழுப்பிய வழக்கிற்கும் எந்த தொடா்பும் இல்லை, பல்கலைக்கழக துணை வேந்தா்களை நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயா் நீதிமன்றம் தமிழக அரசின் வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களை நியமிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைகழகங்கள் தலைமை இல்லாமல் இயங்கி வருகிறது ,எனவே சென்னை உயா்நீதிமன்றத்தின் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் , இந்த வழக்கை விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்‘ என்று வாதங்களை முன் வைத்தனா்.