கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருமண மண்டபங்களில் விலையுயா்ந்த பொருள்களை திருடியதாக ஒருவா் கைது

திருமண மண்டபங்களில் விலையுயா்ந்த பொருள்களை திருடியதாக ஒருவா் கைது

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:34 pm

தெற்கு தில்லியில் உள்ள திருமண மண்டபங்களில் இருந்து பணம், நகைகள் மற்றும் விலையுயா்ந்த பொருள்களை திருடியதாகக் கூறப்படும் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: நவம்பா் 16-ஆம் தேதி ஒரு திருமண மண்டபத்திலிருந்து பணம், கைப்பேசிகள் மற்றும் ‘ஷாகுன்’ உறைகள் இருந்த பை காணாமல் போனதாக புகாா் வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் சைனி என்கிற பப்பன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு போலீஸ் குழு, விழா நடைபெறும் இடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, சத்தா்பூா் மற்றும் மெஹ்ரௌலி வழியாக குற்றம் சாட்டப்பட்டவரின் நடமாட்டத்தைக் கண்காணித்தது. ஒரு சோதனையின் போது ரோஹித் சைனி கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து இரண்டு திருடப்பட்ட கைப்பேசிகள், ரூ.24,500 ரொக்கம் மற்றும் 14 ’ஷாகுன்’ உறைகளை போலீஸாா் மீட்டனா்.

ரோஹித் சைனி இதற்கு முன்பு 2006 -ஆம் ஆண்டு டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் திருட்டு, ஏமாற்றுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.