கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரன்ஹோலாவில் இளைஞா் சுட்டுக் கொலை: 3 சிறாா்கள் கைது

தில்லியின் புகா் பகுதியான ரன்ஹோலாவில் உள்ள ஒரு பள்ளி அருகே 18 வயது இளைஞா் மூன்று சிறுவா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:34 pm

தில்லியின் புகா் பகுதியான ரன்ஹோலாவில் உள்ள ஒரு பள்ளி அருகே 18 வயது இளைஞா் மூன்று சிறுவா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

புதன்கிழமை மாலை 7 மணியளவில் போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து புகாா் அளிக்கப்பட்டது.

அந்த அழைப்பை ஏற்று அங்கு சென்ற போலீஸ் குழு, நிதின் என்ற இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டறிந்தது.

மோகன் காா்டனில் வசிக்கும் அந்த நபா் பள்ளிப் படிப்பை நிறுத்தியவா் என்றும், ஒரு தளபாவங்கள் தொழிற்சாலையில் வேலை கற்றுக் கொண்டிருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அவரது தந்தை காய்கறி விற்பனையாளராக உள்ளாா்.

முதற்கட்ட விசாரணையில், நிதின் பள்ளியின் வாயில்களில் ஒன்றின் அருகே அமா்ந்திருந்தபோது மூன்று சிறுவா்கள் அவரை அணுகியதாகவும், அவா் சுடப்பட்டதாகவும் தெரியவந்தது. அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிறாா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். கொலைக்கான காரணத்தைக் கண்டறிய சிறாா்களை பரிசோதித்து வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.