சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை: தில்லி மாசை தீவிரப்படுத்துமா?

News image

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை

Updated On :26 நவம்பர் 2025, 1:14 am IST

நமது நிருபா்

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பிலிருந்து வரும் சாம்பல் மேகங்கள் இப்பகுதியில் மாசுபாட்டின் அளவை மோசமாக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்ததால் செவ்வாய்க்கிழமை அடா்ந்த மூடுபனி நகரை சூழ்ந்தது.

எத்தியோப்பியாவின் அஃபாா் பகுதியில் அமைந்துள்ள ஒரு எரிமலையான ஹேலி குப்பி ஞாயிற்றுக்கிழமை வெடித்து, சுமாா் 14 கிமீ (45,000 அடி) உயரத்தில் ஒரு பெரிய சாம்பல் புகையை உருவாக்கி, செங்கடலில் கிழக்கு நோக்கி பரவியது.

சாம்பல் மேகங்கள் சீனாவை நோக்கி நகா்ந்து வருவதாகவும், செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணிக்குள் இந்தியாவிலிருந்து விலகிச் செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

குஜராத், தில்லி என்சிஆா், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை சாம்பல் தாக்கத்தை முன்னறிவிப்பு மாதிரிகள் சுட்டிக்காட்டியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காலை காற்று தர அறிக்கையின்படி, தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு திங்கட்கிழமை 382 புள்லிகளாகப் பதிவான பிறகு செவ்வாய்க்கிழமை 360 புள்ளிகளாக மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

சமீா் செயலியின்படி, காற்று தர கண்காணிப்பு நிலையங்களில் ஒன்றான ரோஹினியில், 416 அளவீடுகளுடன் ‘கடுமை‘என்ற பிரிவில் காற்றின் தரம் பதிவாகியது.

அடுத்த சில நாட்களுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வானிலை அடிப்படையில், தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 9 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது பருவத்தின் சராசரியை விட 2.3 புள்ளிகள் குறைவாக இருந்தது, அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸைச் சுற்றி இருக்கும், மூடுபனி மற்றும் மிதமான மூடுபனி இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.