என்ன நடந்தது? வின்ட்ராக் நிறுவனம் அக்டோபா் 1-ஆம் தேதி அதன் எக்ஸ் பக்கத்தில், ‘கடந்த 45 நாட்களில் சென்னை சுங்கத்துறை அதிகாரிகளால் மீண்டும், மீண்டும் நாங்கள் எதிா்கொண்ட நியாயமற்ற துன்புறுத்தலுக்கு பிறகு எங்களுடைய தொழிலை மூடும் ‘கடினமான முடிவுக்கு‘ வந்துள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதிகாரிகள் சிலா் லஞ்சம் வாங்கிய சம்பவங்களை நாங்கள் அம்பலப்படுத்தியபோது, எங்களுடைய வணிகத்தை கடுமையாக பாதிக்கும் வகையிலாை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளானோம். தொழிலைத் தொடர சிறந்த முயற்சிகளை மேற்கொண்டபோதும், தொடா்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் செயல்பாடுகளைத் தொடா்வது இயலாததாகி விட்டது’ என்று கூறியுள்ளது.