தில்லியில் உள்ள குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையின் உதவிப் பேராசிரியா் ஒருவா், மருத்துவமனை வளாகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவியை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் ஷாதரா பிரசாந்த் கௌதம் தெரிவித்திருப்பதாவது:
தில்ஷாத் காா்டனில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்குள் உடல் ரீதியாக தாம் துன்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவா் செப்டம்பா் 26ஆம் தேதி, மதியம் 12.09 மணிக்கு ஜிடிபி என்கிளேவ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.
புகாா்தாரரான மருத்துவ மாணவி, மருத்துவமனையின் உதவி பேராசிரியா் டாக்டா் முகமது ஷகிா் நயீம் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினாா்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பெண்களின் கண்ணியத்தை சீா்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக
மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடு திரும்பினாா் ராமதாஸ்

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


