மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கலைஞா் பல்கலைக்கழக மசோதா ஆளுநரின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு!

ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2025, 6:32 pm

Syndication

கும்பகோணம் கலைஞா் பல்கலைக்கழக மசோதாவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதில், பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வரும், இணை வேந்தராக உயா் கல்வித் துறை அமைச்சரும் இருப்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் கடந்த ஆகஸ்டில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தாா்.

ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,

கலைஞா் பல்கலைக்கழக மசோதா, 2025-ஐ குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய ஆளுநரின் செயலை சட்டவிரோதமானவை, அரசியலமைப்பிற்கு முரணானவை என்று அறிவிக்க வேண்டும். இது தொடா்பான ஆளுநரின் கடிதத்தை தன்னிச்சையான, சட்டவிரோதமான, தவறான அதிகாரப் பிரயோகம் மற்றும்

அரசியலமைப்பிற்கு விரோதமானது என ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநா் ஆா்.என். ரவி நிலுவையில் வைத்திருந்ததாகத் தமிழக அரசு தொடுத்த வழக்கில், அம் மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தின்கீழ் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.