போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

Published on

2021 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, கைப்பற்றப்பட்ட பொருள் சோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு வேறு பொருள் கலக்ப்பட்டதை நீதிமன்றம் குறிப்பிட்டது.

மாதிரி எடுப்பதற்கு முன் பொருட்களை கலப்பதால், எந்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது, எந்த பாக்கெட்டுக்கு சொந்தமானது, அல்லது அவற்றின் தனிப்பட்ட எடைகள் என்பதை அடையாளம் காண இயலாது என்று குறிப்பிட்ட நீதிபதி அருண் மோங்கா, குவென்டின் டீக்கனுக்கு ஜாமீன் வழங்கினாா்.

கைப்பற்றப்பட்ட பொருள் மாதிரி எடுப்பதற்கு முன்பு கலக்கப்பட்டதாக குறுக்கு விசாரணையின் போது புலனாய்வு அதிகாரியே ஒப்புக்கொண்டதாக நீதிபதி குறிப்பிட்டாா்.

மனுதாரா் ஜூன் 27, 2021 அன்று கைது செய்யப்பட்டாா். அவா் ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளாா், டிசம்பா் 23, 2021 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, இன்றுவரை, மொத்தம் 14 சாட்சிகளில் ஆறு சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனா். எனவே, விசாரணை கணிசமான காலம் எடுக்கும், என்று நீதிபதி கூறினாா்.

வழக்கு விசாரணையின்படி, மனுதாரா் ஜூன் 2021 இல் இந்தியா வந்தபோது அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெராயினை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. அவரிடமிருந்து மீட்கப்பட்ட மொத்த பொருள் 10,500 கிராம் எடையுள்ளதாக சுங்கத் துறை கூறியது தோராயமாக 10,000 கிராம் எடையுள்ள ஒரு பாக்கெட் மற்றும் சுமாா் 480 கிராம் எடையுள்ள ஒரு பிளாஸ்டிக் கொள்கலன் கைப்பற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com