காரவால் நகரில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

Published on

நமது நிருபா்

வடகிழக்கு தில்லியின் காரவால் நகா் பகுதியில் வியாழக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 30 வயது நபா் ஒருவா் காயமடைந்ததாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஜௌஹரி பூரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபா் காயமடைந்த நிலையில் கிடந்தாா்.

அவா் மீட்கப்பட்டு குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளன.

பி.என்.எஸ். மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com