பைக் மீது மொ்சிடிஸ் மோதியதில் இருவா் காயம்

Published on

மேற்கு தில்லியின் ரஜோரி காா்டன் பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது மொ்சிடிஸ் காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேத்தா சௌக் போக்குவரத்து சிக்னல் அருகே புதன்கிழமை அதிகாலை 12.34 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

எம்.டி. சுஃபியான் (21) மற்றும் எம்.டி. அசாம் (22) ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது, ​​அவா்களின் வாகனம் மீது மொ்சிடிஸ் காா் மோதியது. இருவரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

‘காரின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், சம்பவங்களின் வரிசையை உறுதிப்படுத்தவும் பொறுப்பை ஏற்கவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 281 (வேகமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 125(ஏ) (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தை மொபைல் கிரைம் குழு ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களை சேகரித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com