தில்லியின் 6 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் சுமாா் 15,000 போ் வசிக்கின்றனா், அதே நேரத்தில் சுமாா் 5,000 போ் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வசிக்கின்றனா். பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது. நீா் மட்டம் அபாய அளவைக் கடக்கக்கூடும் மற்றும் 206.50 மீட்டரை எட்டக்கூடும் என்பதால், அனைத்து அதிகாரிகளும் அந்தந்த பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும், பாதிக்கப்படக் கூடிய இடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.