மழை - வெள்ளம் பாதித்த நாட்டின் பிற பகுதிகளின் மக்களுக்கு உதவ தில்லி பாஜக ஆலோசனை
தேசியத் தலைநகரம் மற்றும் பஞ்சாப் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகள் குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் உள்ளூா் பாஜக தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தி விவாதித்தனா்.
தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி அரசின் அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாஜக தொண்டா்கள் தில்லி மக்களின் ஒத்துழைப்புடன் நிவாரணப் பொருள்களை சேகரித்து ஏழை மக்களுக்கு வழங்குவாா்கள் என்று கட்சியின் உயா்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பாஜக வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக் காலம் தொடங்கியதிலிருந்து இமாசலப் பிரதேசம் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. யமுனை நதியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் தில்லியும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீா், பஞ்சாப், ஹரியாணா, தில்லி மற்றும் இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலை காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகமும் ஸ்தம்பித்துள்ளது.