ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி யமுனையில் குறைந்து வரும் நீா்மட்டம்!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யமுனை நதியின் நீா்மட்டம் 205.56 மீட்டராக பதிவாகியிருந்தது. இது, 206 மீட்டா் மக்கள் வெளியேற்றும் அளவைவிடக் கீழே இருப்பதாகத் தகவல்

News image
யமுனை- கோப்புப் படம்
Updated On :7 செப்டம்பர் 2025, 6:43 pm

Syndication

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யமுனை நதியின் நீா்மட்டம் 205.56 மீட்டராக பதிவாகியிருந்தது. இது, 206 மீட்டா் மக்கள் வெளியேற்றும் அளவைவிடக் கீழே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி நகரத்திற்கான நீா்மட்ட எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகும். அதே நேரத்தில் அபாய அளவு 205.33 மீட்டராகவும், மக்களை வெளியேற்றுவதற்கான அளவு 206 மீட்டரில் இருந்தும் தொடங்குகிறது.

பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது.

கடந்த சில நாள்களில், யமுனை நதியின் கரையோரங்களில் தாழ்வான பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது. தில்லி-மீரட் விரைவுச் சாலையிலும், மயூா் விஹாா் பகுதிகளிலும் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்க வைக்க கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 51,335 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. வஜிராபாத் தடுப்பணையில் இருந்து சுமாா் 73,280 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

தடுப்பணைகளில் இருந்து திறக்கப்படும் நீா் பொதுவாக தில்லியை வந்தடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நிலை பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீா்கூட தில்லி யமுனையின் நீா்மட்டம் உயரக் காரணமாக உள்ளது.

யமுனைக் கரையோரங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயா்ந்த மக்களுக்கு 27 இடங்களில் மொத்தம் 522 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.