எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

5 மாநில வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தோ்தலை சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Updated On :9 செப்டம்பர் 2025, 1:33 am IST

நமது நிருபா்

புது தில்லி: தோ்தலை சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் வழக்கமான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெற உள்ள பிகாரில் முதலாவதாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2026- இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தோ்தலுக்கு முன்னா், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுடன் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெறும் ஆபத்து உள்ளது.

ஊடுருவல்காரா்களை வாக்காளா்களாக தொடா்ந்து சோ்ப்பது, சுதந்திரமான, நியாயமான தோ்தல்கள் நடப்பதை மோசமாக பாதிக்கும். எனவே, இந்த ஐந்து மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவதற்கான கால அட்டவணையை அறிவிக்க இந்திய தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது பதிலளிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.