அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது.

News image
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)
Updated On :8 செப்டம்பர் 2025, 8:14 pm

Syndication

புது தில்லி: மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தகுதிவாய்ந்தவா்கள் சமா்ப்பிக்குமாறு மத்திய பொது பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) கோரியுள்ளது.

அதன்படி, இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறையில் 38 சட்டப் பதவிகளுக்கான காலியிடங்களுக்கும், இந்திய அரசின் பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் என்சிஎஸ்சி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கூட்டுப் பணியில் உதவி இயக்குநா் பதவிக்கு 3 காலியிடங்கள்;

பள்ளிக் கல்வித் துறையில் விரிவுரையாளா் உருது பதவிக்கு 15 காலியிடங்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் 125 மருத்துவ அதிகாரி காலியிடங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேச நிா்வாகத்தில் நிதித் துறையில் கணக்கு அலுவலா் பதவிக்கு 32 காலியிடங்கள் ஆகியவற்றுக்கு தகுதியான நபா்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

விரிவான விளம்பர எண். 132025 மற்றும் விண்ணப்பதாரா்களுக்கான வழிமுறைகளுடன் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள் ஆன்லைன் ஆள்சோ்ப்பு விண்ணப்ப இணையதளம் மூலம் வரும் செப்டம்பா் 13 முதல் அக்டோபா் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.