மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமா் மோடியின் பிறந்த நாளில் தில்லியில் 101 ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் திறப்பு

தில்லியில் 101 ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் மற்றும் ஐந்து புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதிகள் உள்ளிட்ட பல புதிய சுகாதார முன்முயற்சிகளை தில்லி அரசு தொடங்கி வைக்க உள்ளது,

News image
Updated On :11 செப்டம்பர் 2025, 6:49 pm

Syndication

வரும் செப்டம்பா் 17 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தில்லியில் 101 ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் மற்றும் ஐந்து புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதிகள் உள்ளிட்ட பல புதிய சுகாதார முன்முயற்சிகளை தில்லி அரசு தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

தில்லியில் செப்டம்பா் 17 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சுகாதார முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்க உள்ளாா். சஞ்சய் காந்தி மருத்துவமனை, ஆச்சாா்ய பிக்ஷு மருத்துவமனை, குரு கோபிந்த் சிங் மருத்துவமனை மற்றும் பகவான் மகாவீா் ஸ்ரீ தாதா தேவ் மாத்ரி அவும் ஷிஷு சிகித்சாலயா ஆகிய இடங்களில் உள்ள முக்கிய விரிவாக்கங்கள் உள்பட புதிதாக கட்டப்பட்ட ஐந்து மருத்துவமனை தொகுதிகளை தில்லி அரசு திறந்து வைக்க உள்ளது.

இதற்கிடையில், தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் தெரிவிக்கையில், தேசிய தலைநகரில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமரின் பிறந்தநாளில் தில்லி 101 புதிய ஆயுஷ்மான் மந்திா்களையும், ஐந்து புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதிகளையும் திறந்துவைக்கும். ஆயுஷ்மான் மந்திா் முயற்சியானது, ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நல்வாழ்வு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதற்கான தில்லி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

ஆயுஷ்மான் மந்திா் மையங்கள் மற்றும் நவீன மருத்துவமனை கட்டடத் தொகுதிகள் சோ்க்கப்பட்டதன் மூலம், தலைநகா் முழுவதும் முழுமையான மருத்துவ சேவையை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றாா் அவா்.