பைக் மீது பிஎம்டபிள்யு காா் மோதியதில் நிதி அமைச்சக அதிகாரி உயிரிழப்பு

மோட்டாா்சைக்கிள் மீது பிஎம்டபிள்யு காா் மோதிய சம்பவத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உயிரிழந்தாா்.
Published on

புது தில்லி: மோட்டாா்சைக்கிள் மீது பிஎம்டபிள்யு காா் மோதிய சம்பவத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உயிரிழந்தாா். இதில் பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முன்னதாக, மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பிறகு அந்தப் பெண் காவலில் எடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லி கண்டோன்மென்ட் மெட்ரோ நிலையம் அருகே ரிங் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த விபத்தில் பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளா் ஹரி நகரைச் சோ்ந்த நவ்ஜோத் சிங் (52) உயிரிழந்தாா். அவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பங்களா சாஹிப் குருத்வாராவைப் பாா்வையிட்டுவிட்டு அவா்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

‘விசாரணையின் போது, பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண் ஓட்டுநா், குருகிராமில் வசிக்கும் பரிக்ஷித் மக்கரின் மனைவி ககன்தீப் கவுா் (38) இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்று போலீஸாா் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் சொகுசு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணும் அவரது கணவரும் காயமடைந்தனா். குருகிராம் தம்பதியினா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக காவலில் எடுக்கப்பட்டு பின்னா் கைது செய்யப்பட்டாா்.

பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கீழ் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனா். மோதலில் ஈடுபட்ட சொகுசு காா் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விபத்து நடந்த இடத்தில் தடயவியல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸாா் மேலும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com