தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் பல பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்...

கோப்பிலிருந்து படம் | ஏஎன்ஐ

Published On :28 செப்டம்பர் 2025, 9:45 pm IST

புது தில்லி: தில்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று(செப். 28) ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘டெரர்ரைஸெர்ஸ்111’ என்ற குழுவானது இன்று(செப். 28) தில்லியில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கும் அதேபோல, தில்லி உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது.

தில்லியின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் காலை 6 மணியளவில் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதன்பின் அவை யாவும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது.

Summary

More than 300 Delhi schools, several airports across the country hit by bomb hoax

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.