தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் பல பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்...
தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோப்பிலிருந்து படம் | ஏஎன்ஐ
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று(செப். 28) ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘டெரர்ரைஸெர்ஸ்111’ என்ற குழுவானது இன்று(செப். 28) தில்லியில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கும் அதேபோல, தில்லி உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது.

தில்லியின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் காலை 6 மணியளவில் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதன்பின் அவை யாவும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது.

Summary

More than 300 Delhi schools, several airports across the country hit by bomb hoax

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com