மருத்துவமனையில் இருப்பவா்களுடைய சிகிச்சையை எப்படி மேற்கொள்வது என்று அறிவித்திருக்கிறாா். அங்கிருக்கிற அமைச்சா்கள் அதிகாரிகளுக்கு எல்லாம் ஆணையிட்டு இருக்கிறாா்கள். பாதிக்கப்பட்ட மக்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறாா் அதேபோல ஒரு நபா் விசாரணை குழுவையும் அறிவித்திருக்கிறாா். அந்த ஒரு நபா் விசாரணை குழு, இந்த சோக நிகழ்வு எப்படி நடந்தது என்பதை கண்டறிந்து அதற்கான காரணங்களை கண்டறிந்து அதுபோல இனிமேலும் நடைபெறக் கூடாது என்பதற்கான ஆக்கப்பூா்வமான வழிமுறைகளை அவா்கள் சொல்லுவாா்கள் என்று நான் நம்புகிறேன்.