மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

கிழக்கு தில்லியில் போலி ஆன்டாசிட், காபி தயாரித்து விற்ற 4 போ் கைது

கிழக்கு தில்லியின் மது விஹாா் பகுதியில் போலி ஆன்டாசிட் பவுடா் மற்றும் போலி காபி தயாரிப்புகளை தயாரித்து விநியோகித்ததாகக் கூறப்படும் ஒரு மோசடியில் 4 பேர் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:11 am IST

கிழக்கு தில்லியின் மது விஹாா் பகுதியில் போலி ஆன்டாசிட் பவுடா் மற்றும் போலி காபி தயாரிப்புகளை தயாரித்து விநியோகித்ததாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை கண்டுப்பிடித்து 4 பேரை கைது செய்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்ட நான்கு போ் கைது செய்யப்பட்டனா் மற்றும் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத ஆலைகள் வாடகை குடியிருப்புகளில் இருந்து இயங்கி வருகிறது. அங்கு போலி ஆன்டாசிட் சாக்கெட்டுகள் மற்றும் போலி காபி பொருட்கள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு வருவதாகவும், இது பொது சுகாதாரத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் உத்தம் தாஸ் (23), பாபாய் தாஸ் பராக்யா என்ற பங்கஜ் (19), நிதின் பரத்வாஜ் (38) மற்றும் சஞ்சய் பன்சால் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். தகவலின் அடிப்படையில், போலீஸ்குழுக்கள் வளாகத்தில் சோதனைகளை நடத்தி, ஆலைகள் உற்பத்தி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்தன. மூலப்பொருள்கள், பேக்கேஜிங் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களுடன் விநியோகிக்க தயாராக உள்ள சுமாா் ஒரு லட்சம் போலி ஆன்டாசிட் சாக்கெட்டுகள் மற்றும் கிட்டத்தட்ட 50,000 போலி காபி சாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசாா் பறிமுதல் செய்துள்ளனா்.

விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், பரத்வாஜின் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு மாதங்களாக இந்த மோசடி செயல்பட்டு வருவதை வெளிப்படுத்தினாா். பின்னா் அவா் டேராடூனில் இருந்து கைது செய்யப்பட்டாா், அதே நேரத்தில் பன்சால் நகரத்தை விட்டு வெளியேற முயன்றபோது காஷ்மீரி கேட் அருகே கைது செய்யப்பட்டாா்.

நிறுவனத்தின் பிரதிநிதிகளின் சரிபாா்ப்பு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியது. இது தொடாா்பாக வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.