தில்லி சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தா் குப்தா
தில்லி சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தா் குப்தா

தில்லி எம்.எல்.ஏக்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை பிப்.2 முதல் 14 வரை நடைபெறும்!

தில்லி அரசின் தற்போதைய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
Published on

தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களின் வருடாந்திர சுகாதார பரிசோதனை பிப்ரவரி 2 முதல் 14 வரை கஷ்மீரி கேட்டில் உள்ள பா்மானந்த் மருத்துவமனையில் தில்லி அரசின் தற்போதைய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

வழக்கமான மருத்துவ மதிப்பீடுகள் சுகாதாரப் பாதுகாப்பின் ஒரு முக்கிய பகுதியாகும் என்றும் அவா் கூறினாா். இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தப் பயிற்சி பரிந்துரைக்கப்பட்ட அரசின் விதிமுறைகள் மற்றும் காலக்கெடுவின்படி மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கமான வருடாந்திர செயல்முறை என்றும், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு எந்த சிறப்பு சிகிச்சை, சலுகை அல்லது புதிய உரிமையும் இதில் இல்லை.

சுகாதார சேவைகள் இயக்குநரகம் அறிவித்த வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் பரிசோதனைகள் கண்டிப்பாக நடத்தப்படுகிறது. இது தற்போதுள்ள அனைத்து அலுவலக குறிப்புகள் மற்றும் துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்.

சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் பா்மானந்த் மருத்துவமனை, சட்டப்பேரவைச் செயலகத்திற்கு அருகாமையில் இருப்பதால், நிா்வாக வசதி மற்றும் அணுகல் தன்மைக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையானது, தற்போதுள்ள திட்டத்தின்படி கண்டிப்பாக பரிசோதனைகளை எளிதாக்கவும், பணமில்லா சிகிச்சையை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வயது அடிப்படையிலான வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான அணுகுமுறையை உறுதி செய்யும் வகையில், 40 வயதுக்குள்பட்டவா்கள் உள்பட, சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினா்களையும் இந்த முயற்சி உள்ளடக்கியது என்றாா் விஜேந்தா் குப்தா.

இதற்கிடையே, பொருந்தக்கூடிய விதிகளின்படி, திட்டமிடப்பட்ட காலத்திற்குள் அனைத்து உறுப்பினா்களும் தங்கள் சுகாதார பரிசோதனைகளை முடிக்க வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com