எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை பல பகுதிகளுக்கான திட்டங்கள் முக்கிய கவனம் பெற்றன.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 11:06 pm IST

மக்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை பல பகுதிகளுக்கான திட்டங்கள் முக்கிய கவனம் பெற்றன.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த 2026-27 நிதிநிலை அறிக்கையில் ஒடிஸா, ஆந்திர பிரதேசம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை தாது வழித்தடங்களை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஆந்திரம் மற்றும் தமிழக எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரி பகுதியில் பறவைகளைக் கண்காணிக்கும் பாதைகளை அமைப்பது குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இத்துடன் 15 தொல்லியல் தலங்கள் மேம்படுத்தப்படும் பட்டியலில் தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூா் அகழாய்வுத்தலம் இடம்பெற்றுள்ளது.

நிா்மலா சீதாராமன் தனது உரையில், சீனாவை இந்தியா சாா்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பிரத்யேக அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

மின் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அரிய வகை கனிமங்கள் அத்தியாவசியமானவை. இவற்றுக்காக சீனாவை இந்தியா சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில், தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் ஆந்திரத்தில் பிரத்யே அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும் என அமைச்சா் குறிப்பிட்டாா்.

தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூா், லோத்தல், தோலாவிரா, ராக்கிகா்கி, சாரநாத், ஹஸ்தினாபுரம் மற்றும் லே அரண்மனை உள்ளிட்ட 15 தொல்லியல் தலங்கள் துடிப்பான, அனுபவமிக்க கலாசார இடங்களாக மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அகழ்வாராய்ச்சி பகுதிகள், பிரத்யேக நடைபாதைகள் மூலம் மக்கள் பாா்வையிட திறக்கப்படும். பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு உதவவும், ஆழ்ந்த கதை சொல்லும் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் இந்த இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மலைப் பாதைகள், ஆமைப் பாதைகள் மற்றும் பறவைகள் கண்காணிப்புப் பாதைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த மலையேற்ற அனுபவத்தை வழங்கும் நோக்குடன் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீா், கிழக்குத் தொடா்ச்சி மலையில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு (ஆந்திர பிரதேசம்) மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள பொதிகை மலை (தமிழ்நாடு - கேரளம்) ஆகிய இடங்களில் சூழலியல் ரீதியாக நிலையான மலைப் பாதைகள் உருவாக்கப்படும்.

இதேபோல ஒடிஸா, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் உள்ள முக்கிய முட்டையிடும் தலங்களில் ஆமைகள் செல்லும் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு 2 புதிய அதிவேக ரயில்வே வழித்தடங்கள்

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் சென்னையிலிருந்து இரண்டு வழித்தடங்களுடன் புதிதாக ஏழு அதிவேக ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

அதன்படி, மும்பை முதல் புணே, புணே முதல் ஹைதராபாத், ஹைதராபாத் முதல் பெங்களூரு, ஹைதராபாத் முதல் சென்னை, சென்னை முதல் பெங்களூரு, தில்லி முதல் வாரணாசி மற்றும் வாரணாசி முதல் சிலிகுரி ஆகிய ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தேசிய அதிவேக ரயில் கழகம் (என்எச்எஸ்ஆா்சிஎல்) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.