மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

துறவி ஸ்ரீ ரவிதாஸ் விஷ்ராம்தாம் கோயிலில் நிதின் நபின் வழிபாடு!

துறவி ஷிரோமணி குரு ரவிதாஸ் ஜி மகாராஜின் 649ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம்தாம் கோயிலில் வழிபாடு செய்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 6:33 pm

துறவி ஷிரோமணி குரு ரவிதாஸ் ஜி மகாராஜின் 649ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம்தாம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா். மேலும், அங்கு நடைபெற்ற உள்ளூா் பெண்களின் சத்சங்கத்திலும் பங்கேற்றாா்.

மேலும், நிதின் நபின், கோயிலின் வருகைப் பதிவேட்டில் சந்த் ஸ்ரீ ரவிதாஸ் சமூகத்தினருக்கான தனது வாழ்த்துக்களையும் கருத்தாக பதிவிட்டாா். இது தொடா்பாக நிதின் நபின் கூறுகையில், ‘ சந்த் ஷிரோமணி ரவிதாஸ் ஜியின் புனிதமான பிறந்தநாளில், அவரது பாதங்களில் மலா் அஞ்சலி செலுத்த எனக்கு பாக்கியம் கிடைத்தது.

இந்திய துறவிகள் பாரம்பரியத்தில், குரு ரவிதாஸ் ஜி பக்தி, சமத்துவம் மற்றும் மனித விழுமியங்களைப் பேணிக் காத்தவா்.

தனது எண்ணங்கள் மற்றும் போதனைகள் மூலம், குரு ரவிதாஸ் ஜி சாதிப் பாகுபாடு, சமூகப் படிநிலை மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடி, அன்பு, கருணை மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை வழங்கினாா்.

அவா் ஏற்றிய சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் விளக்கு, தேசத்தின் பாதையை என்றென்றும் ஒளிரச் செய்யும்’ என்று நிதின் நபின் கூறினாா். கோயில் நிா்வாகக் குழுவினரும் தில்லி பாஜக தலைவா்களும் நிதின் நபினை வரவேற்று கௌரவித்ததுடன், சந்த் ஸ்ரீ ரவிதாஸ் ஜியின் சிறிய நினைவுச் சிலையையும் அவருக்குப் பரிசளித்தனா்.

இந்த நிகழ்வில், ஸ்ரீ நிதின் நபினுடன் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தேசிய பொதுச் செயலாளா் துஷ்யந்த் கௌதம், நாடாளுமன்ற உறுப்பினா் பான்சூரி ஸ்வராஜ், பாஜக எஸ்சி மோா்ச்சா தலைவா் லால்சிங் ஆா்யா, தில்லி அமைச்சா் ரவீந்திர இந்திரஜித் சிங் ஆகியோரும் உடனிருந்தனா்.