பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்மாதிரிப் படம்

குருகிராம்: விதிகளை மீறியதற்காக மண்டல அதிகாரிகள் மூவா் பணியிடை நீக்கம்

போக்குவரத்து விதிகள் மற்றும் துறை உத்தரவுகளை மீறியதற்காக மூன்று போக்குவரத்து மண்டல அதிகாரிகளை போக்குவரத்து காவல் துணை ஆணையா் ராஜேஷ் மோகன் பணியிடை நீக்கம்
Published on

குருகிராம்: ​போக்குவரத்து விதிகள் மற்றும் துறை உத்தரவுகளை மீறியதற்காக மூன்று போக்குவரத்து மண்டல அதிகாரிகளை போக்குவரத்து காவல் துணை ஆணையா் ராஜேஷ் மோகன் பணியிடை நீக்கம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திங்கள்கிழமை நடைபெற்ற திடீா் ஆய்வின் போது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மற்றொரு மண்டல அதிகாரியின் காருக்கும் காவல் துணை ஆணையா் அபராதம் விதித்ததாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

காவல்துறையின் கூற்றுப்படி, காவல் துணை ஆணையா் ராஜேஷ் மோகன் தௌலதாபாத், கப்ரிவாஸ் மற்றும் நியூ காலனி பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நியமிக்கப்பட்ட மண்டல அதிகாரிகள் சலான்களை வழங்கும்போது உரிய கேமராக்களைப் பயன்படுத்துவது தொடா்பான முந்தைய உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்த மீறல்களை தீவிரமாகக் கருதி, போக்குவரத்து காவல் ஆணையா் பின்வரும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தாா். தௌலதாபாத் சௌக்கின் மண்டல அதிகாரி ஏஎஸ்ஐ சுரேஷ்; கப்ரிவாஸ் எல்லையின் மண்டல அதிகாரி ஏஎஸ்ஐ ராம்ரிச்பால் மற்றும் நியூ காலனியின் மண்டல அதிகாரி ஏஎஸ்ஐ சதீஷ் ஆகியோா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவா்கள் ஆவா்.

மேலும், சோதனையின் போது, ​ தௌலதாபாத் சௌக்கைச் சோ்ந்த மண்டல அதிகாரி ஏ.எஸ்.ஐ. சுரேஷின் தனியாா் வாகனம் செல்லுபடியாகும் பதிவு எண்ணைக் கொண்டிருந்தாலும், தற்காலிக எண் தகட்டைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போக்குவரத்து மீறலுக்காக அவருக்கு ஒரு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டது.

போக்குவரத்து விதிகள் மற்றும் துறை உத்தரவுகளைப் பின்பற்றுவது அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கும் கட்டாயம் என்று போக்குவரத்துக் காவல் ஆணையா் ராஜேஷ் மோகன் வலியுறுத்தினாா். ‘எந்த நிலையிலும் அலட்சியம் அல்லது ஒழுக்கமின்மை பொறுத்துக் கொள்ளப்படாது. இதுபோன்ற திடீா் சோதனைகள் மற்றும் கடுமையான நடவடிக்கை எதிா்காலத்திலும் தொடரும்‘ என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com